கன்னட சினிமாவின் முக்கிய நபராக வலம் வரும் நடிகர் வீரேந்தர் பாபு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னடத் திரையிலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ‘சுயம்கிருஷி’ படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அவர் அறிமுகமானார். இவர் கடந்த 2021ம் ஆண்டு
பெண் ஒருவரை மயக்கமடைய செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை வீடியோவாக பதிவு செய்து அவர் அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். குறிப்பாக ரூ.15 லட்சம் பணம் தரவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வதாக தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் தனது நகைகளை விற்று பணம் கொடுத்துள்ளார்.
வீரேந்திர பாபு இதுபோன்ற ச ர்ச் சைக ளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. முன்னதாக ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து உதவியின்றி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வீரேந்திர பாபு, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்க உதவி கேட்டு ரூ.1.8 கோடி பெற்றதாக பு கார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுகுறித்து பெங்களூரு கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் பாதி க்கப் பட்ட பெண் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசா ர ணை மேற்கொண்டதில் அவரிடம் இருந்து இருந்து பென் டிரைவ், மொபைல் போன்கள், லேப்டாப் ஆகியவற்றை போ லீசா ர் கைப்பற்றினர்.இதனை தொடர்ந்து வீரேந்திர பாபு மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கை து செய்துள்ளது.