தான் 20 ஆண்டுகளாக பார்த்த வேலையை இ ழக்கும் சூழல் உருவானது. இதனால் வருமானம் இல்லாமல் அ வதிப்படுவந்த அவர் தனது குடும்பத்தினருடன் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை தெரிந்து கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், ரோஸாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைபட்டு, தங்களது குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
சுத்தம் செய்வதற்காக தான் அழைக்கின்றனர் என்று நினைத்த அப்பணிப்பெண், சீருடை மற்றும் கையில் பக்கெட் மற்றும் துடைப்பம் என கையில் வைத்துக் கொண்டு வந்துள்ளார். அங்கிருந்த சக குடியிருப்புக்காரர்கள் அவருக்கு 2400 சதுர அடி உள்ள வீட்டை சுற்றிக் காட்டியுள்ளனர்.
இந்த வீட்டைத் தான் சுத்தம் செய்ய தம்மை அழைத்துள்ளார்கள் என யோசித்துக் கொண்டிருந்த ரோஸாவுக்கு அப்போது தான் மிகப்பெரிய இன்ப அ திர்ச்சி காத்திருந்தது. ஆம் வறுமையால் வாடிய ரோஸாவுக்கு அந்த வீட்டை 2 வருட குத்தகைக்கு இலவசமாக வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் இதனை சற்றும் எதிர்பாராத ரோஸா, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் செயலை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்துள்ளர். இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.