சூர்யா – ஜோதிகா திருமணத்திற்கு முன் நடித்த, ‘ சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரேயா ஷர்மா. தற்போது வளர்ந்து குமரியாக உள்ளார். கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்தும் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால், தான் படித்த துறையிலேயே வேலை செய்ய முடிவெடுத்து விட்டார்.
View this post on Instagram
கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா என வியக்க வைக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் ஸ்ரேயா ஷர்மா.தற்போது கவர்ச்சி குயினாக வளம் வரும் இவர், கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. பட வாய்ப்புகள் வந்து குவியும் என எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதால் தற்போது தன்னுடைய படிப்புக்கு ஏற்ற தொழிலை செய்ய தயாராகிவிட்டார்.
View this post on Instagram
ஸ்ரேயா ஷர்மா, லாயர் தொழிலுக்கு படித்துள்ளார். எனவே அதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் சமூக வலைத்தளத்தில், பொறி பறக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என்கிற எண்ணத்திலும் உள்ளாராம்.
View this post on Instagram
இப்போதும் குழந்தை போல் குட்டி குட்டி ஆடை அணிந்து புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.இப்போதைக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், விடாமல் இவர் முயற்சி செய்து வருவதால் தமிழ் திரையுலகில் கூட விரைவில் ஹீரோயினாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியே தமிழில் இவர் ஹீரோயினாக அறிமுகமானாலும், குழந்தை நட்சத்திரமாக இருந்த போது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு கிடைக்குமா? அல்லது லாயர் தொழிலையே அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.