பச்சை பட்டாணியில் ஏராளமான ஊட்டச்சத்த்க்கள் நிறைந்துள்ளன. மேலும் பச்சை பட்டாணி ஜீரண சக்திக்கு நன்கு உதவுகிறது .உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. பச்சை பட்டாணியில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிஜென்டுகள் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடை செய்கிறது.
பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து நிறைந்துள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறனை அதிகரித்து இவை அல்சைமர் நோயை தடுக்கிறது. பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளது. பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
பச்சை பட்டாணியில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து அவை சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. பச்சை பட்டாணி சூப்பினை அருந்தி சீரான இரத்த அழுத்தத்துடன் இதயத்தை நன்கு பாதுகாக்கலாம்.
பச்சை பட்டாணியில் இருக்கும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. நுரையீரலுக்கும், இதயத்திற்கும் அதிக பலத்தை கொடுக்கக்கூடியவை. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. பல நோய்கலியா குணப்படுத்துகிறது.